சந்தர்ப்பவாதிகளாக மாறி விட்ட சில தமிழக தலைவர்கள் - இலங்கை எம்.பி. சிவாஜி லிங்கம்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள், சந்தர்ப்பவாதிகளாகி விட்டனர். இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சிவாஜி லிங்கம்.
சென்னை செங்குன்றத்தில் தமிழர் தன்மானப் பாசறை என்ற அமைப்பை சிவாஜிலிங்கம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள சில தலைவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்கள் படும் அவதிகளைக் கண்டும் காணாமல் உள்ளனர். இதில் வேதனை என்னவென்றால் இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று இவர்கள் கூறி வருவதுதான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச சமுதாயம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இலங்கையை கட்டாயப்படுத்தி போர் நிறுத்தம் செய்யுமாறு கூறுமாறு நாங்கள் வெளிநாடுகளை தொடர்ந்து வேண்டினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்து விட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பறி போய் விட்டன.
30 ஆண்டு கால போரில் 40 ஆயிரம் போராளிகள் உயிர் நீத்துள்ளனர். 15 ஆயிரம் போராளிகளை அரசு கைது செய்துள்ளது. இவர்களை போர்க் கைதிகளாக நடத்தாமல் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து வருகிறது இலங்கை அரசு.
இந்த சூழ்நிலையில் தற்போது இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை சர்வதேச நிதியம் அளிக்கவிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலங்கைக்கு இவ்வளவு பெரிய கடன் தொகை கிடைப்பதை நியாயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதற்குப் பரிசா இந்த கடன் உதவி என்றார் சிவாஜி லிங்கம்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications