அனில் அம்பானி கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

இதுதொடர்பாக அனில் அம்பானி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், இறுதி விசாரணை நடைபெறும் தேதியை, செப்டம்பர் 1 அன்று முடிவு செய்வதாகக் கூறியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது என்பதால் இறுதி விசாரணையை செப்டம்பர் முதல் தேதியன்று நடத்த வேண்டும் என்று அனில் அம்பானியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் முகேஷ் அம்பானியின் ஆர்ஐஎல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இறுதி விசாரணையை செப்டம்பர் முதல் தேதி நடத்துவதில் என்ன பொது நலம் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு விரைவில் வரவேண்டும் என்று மத்திய அரசும் விரும்புவதாக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் முதல் தேதியன்று இறுதி விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற அனில் அம்பானி தரப்பின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஆனால் இறுதி விசாரணை எப்போது நடக்கும் என்பதை வேண்டுமானால் செப்டம்பர் முதல் தேதி முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications