14 சென்னை இன்ஸ்பெக்டர்கள் தென் மாவட்டங்களுக்கு அதிரடி மாற்றம்
சென்னை: சென்னை மாநகரக் காவல்துறையில் பணியாற்றி வந்த 14 இன்ஸ்பெக்டர்கள், அதிரடியாக மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் நிலவுகிறது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள், அவர்கள் வகித்து வந்த பழைய பதவி, புதிய பதவி விவரம் வருமாறு..
எம்.சி கிறிஸ்டோபர் - திருவொற்றியூர் கிரைம் - வடக்கு மண்டலம்
ஜி.ரவிசங்கர் - புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
ஸ்ரீகாந்த் - கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு - கன்னியாகுமரி மாவட்டம்
எஸ்.சந்தியாகு - திரு.வி.க.நகர் சட்டம் ஒழுங்கு - ரயில்வே
முத்துக்குமார் - அரசினர் தோட்டம் சட்டம் ஒழுங்கு - தென் மண்டலம் (மதுரை)
எஸ்.பாண்டியன் - பெரியமேடு சட்டம் ஒழுங்கு - மத்திய மண்டலம் (திருச்சி)
ஆர்.விமலன் - வடபழனி சட்டம் ஒழுங்கு - ரயில்வே
எஸ்.லட்சுமணன் - மத்தியக் குற்றப்பிரிவு - தென் மண்டலம் (மதுரை)
கே.பொன்னுச்சாமி - வடபழனி குற்றப்பிரிவு - திருச்சி நகரம்
மணவாளன் - ஏழுகிணறு சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
மணிவண்ணன் - வடக்கு கடற்கரை சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
ஆர்.சரவணன் - வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு - தென் மண்டலம் (மதுரை)
அசோகன் - அடையாறு சட்டம் ஒழுங்கு - வடக்கு மண்டலம்
வைரவன் - சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு - தென் மண்டலம் (மதுரை)
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு அந்தந்த மண்டல ஐஜிக்கள் பணிகளை ஒதுக்குவார்கள்.
சென்னை இன்ஸ்பெக்டர்கள் வெளி மாநிலங்களுக்கு குறிப்பாக கன்னியாகுமரி வரை தூக்கி அடிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகர காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications