எழும்பூரில் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்: அரிவாள் வெட்டு-ரணகளமான பஸ்
சென்னை: எழும்பூரில் ரயில் நிலையத்தில் பஸ்சுக்குள் நுழைந்து கல்லூரி மாணவர்களை எதிர்கோஷ்டி கல்லூரி மாணவர்கள் அரிவாள்கள், உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில் பஸ் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் பயணித்த 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சோடா பாட்டில்கள் மற்றும் கல்வீச்சு தாக்குதலில் அந்தப் பகுதியே ரணகளமானது. இவர்களது சண்டையில் அப்பாவிப் பொது மக்களும் பயணிகளும் சிக்கி சீரழிந்தனர்.
இச்சம்பவம் காரணமாக எழும்பூர் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.
இன்று காலை சென்னை பாரிமுனையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் செல்லும் 15பி பஸ் எழும்பூர் ரயில் நிலைய பஸ் நிலையத்துக்கு வந்தபோது அங்கு பதுங்கியிருந்த 30 பேர் கொண்ட கும்பல் கத்திகள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் பஸ்சைத் தாக்கியது.
கண்ணாடிகளையும் உடைத்த அக் கும்பல் பஸ்சுக்குள் ஏறி அதில் அமர்ந்திருந்த சுமார் 20 கல்லூரி மாணவர்களை குறி வைத்து அரிவாள்களால் வெட்டியது. பிற பயணிகளையும் உருட்டுக் கட்டையால் தாக்கினர்.
சோடா பாட்டில்கள் மற்றும் கற்களால் பேருந்தை தாக்கினர். இதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
தாக்குதலையடுத்து பஸ்சில் இருந்து இறங்கி ஓடிய மாணவர்களை எதிர் கோஷ்டி மாணவர்கள் விடாமல் விரட்டிச் சென்றும் தாக்கினர்.
இந்த பயங்கர தாக்குதலில் பச்சையப்பா கல்லூரி மாணவர் சுரேஷ் (19), மற்றும் பிரேம்குமார் (20), கார்த்திக் (21), தேவராஜ் (20), நித்யானந்தம் (19), நிஷாந்த் (19), செல்வம் (20), பயணிகளான செந்தில்குமார், சாங்சிங் ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆவர்.
தகவல் அறிந்து போலீசார் ஓடி வந்து சம்பவ இடத்தில் கிடந்த ஒரு பையை பறிமுதல் செய்தனர். இது தாக்குதல் நடத்திய கும்பல் விட்டுச் சென்ற பையாகும்.
அதில் நோட்டு புத்தகமும், அரிவாளும் இருந்தது. இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் மாணவர்கள் என்று தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இது மாணவர்களின் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதல் என்று தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications