For Daily Alerts
Just In
ஸ்ரீவைகுண்டம் சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி பிரசாரத்தைத் தொடங்கினார்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்திய கம்யூ வேட்பாளர் தனலட்சுமி பிரச்சாரம் தொடங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் சிபிஐ சார்பில் போட்டியிடும் தனலட்சுமி நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தேசிய கட்டுபாட்டு குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவோடு தூத்துக்குடி நாசரேத் டயோசீஸ் பேராயர் ஜெபசந்திரனிடம் ஆசி பெற்றார்.
அதன் பின் தொகுதியில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள், சமுதாய பிரமுகர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படியும் கேட்டு கொண்டார்.
ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் தனலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக பம்பரம் போல விறுவிறுப்பான பிரசாரத்தை தொடங்கி விட்டார் தனலட்சுமி.
Comments
பிரசாரம் தமிழ்நாடு srivaikundam ஸ்ரீவைகுண்டம் தொடக்கம் tamilnadu சட்டசபை இடைத் தேர்தல் assembly by election
Story first published: Friday, July 31, 2009, 9:33 [IST]