For Quick Alerts
For Daily Alerts
Just In
மாவோயிஸ்ட் அட்டூழியம் நீடிப்பு- சிபிஎம் தலைவர் சுட்டுக் கொலை
லால்கர்: மேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியினர் மீதான மாவோயிஸ்ட்கள் தாக்குதல் தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டுள்ளது. மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் இன்று சிபிஎம் தலைவர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்று விட்டனர்.
நேற்றுதான் பல்பஹாரி பகுதியில், ஒரு சிபிஎம் தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று லால்கர் பகுதியில், நிர்மல்மஹதோ என்ற சிபிம் தலைவரை மாவோயிஸ்டுகள் இன்று அதிகாலையில் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
இந்தியா shot dead சுட்டுக் கொலை west bengal மேற்கு வங்கம் maoists land grabbing case லால்கர் மாவோயிஸ்ட்கள்
Story first published: Sunday, August 2, 2009, 16:52 [IST]