For Quick Alerts
For Daily Alerts
Just In
கராச்சியில் கட்டடம் இடிந்து 21 பேர் பலி
கராச்சி: கராச்சி நகரில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆவர்.
லியா மார்க்கெட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கட்டடம் அப்படியே சரி்ந்து விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அந்தப் பகுதி மிகவும் குறுகிய தெருக்களைக் கொண்டது என்பதால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வந்த மழையால் அந்த பழைய கட்டடம் சேதமடைந்திருந்ததாகவும், இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments
Story first published: Sunday, August 2, 2009, 17:01 [IST]