நண்பர்கள் தினத்தில் நண்பர்கள், காதலரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி- தற்கொலை
மும்பை: நண்பர்கள் தினத்தை காதலன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடிய பத்தாம் வகுப்பு சிறுமியை, அந்த நண்பர்களும், காதலரும் சேர்ந்து கற்பழித்து கொடுமை மும்பையில் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அந்த 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
கற்பழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் 20 முதல் 21 வயதுக்குள் இருக்கும். மொத்தம் நான்கு பேர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், சிறுமியின் காதலன் ஆவார். அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பயிற்சி வகுப்புக்காக செல்வதாக கூறி அந்த சிறுமி கிளம்பிச் சென்றுள்ளார். பின்னர் தனது காதலன் ராஜீவை சந்தித்த அச்சிறுமி, அவருடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாட விரும்புவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் கிளம்பிச் சென்றனர். அப்போது அவர்களுடன் ராஜீவின் நண்பர் சஞ்சய் அவர்களுடன் இணைந்து கொண்டார். அதன் பின்னர் மூன்று பேரும் நலஸ்போரா மேற்கில் உள்ள ஃபன் பியஸ்டா தியேட்டருக்குச் சென்றனர். அங்கு சிறுமிக்கு அறிமுகம் இல்லாத 2 பேர் காத்திருந்தனர். அவர்களும், சிறுமியுடன் இணைந்து கொண்டனர்.
தியேட்டரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் வைத்து காருக்குள்ளேயே வைத்து அந்த சிறுமியை நான்கு பேரும் கற்பழித்துள்ளனர்.
தனது காதலன் மற்றும் அவனது நண்பர்களால் தான் கற்பழிக்கப்பட்டதால் அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.
அதிர்ச்சியுன் வீடு திரும்பிய அவர் வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் தாயார் அவரை எழுப்ப அறைக்கு வந்தபோது தனது மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பிரேதப் பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜீவ் உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜீவ் பத்தாவது வகுப்புடன் படிப்பை நிறுத்தியவன். வேலையில்லாமல் சுற்றித் திரிந்துள்ளான். சஞ்சய் மற்றும் மற்ற இருவரும் ஒரு கார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வருபவர்கள். மெக்கானிக் ஷாப்புக்கு வந்த ஒரு காரை எடுத்துக் கொண்டுதான் இவர்கள், அந்த சிறுமியை திட்டமிட்டு ஏமாற்றி அழைத்துச் சென்று கற்பழித்துள்ளனர்.
நண்பர்கள் தினத்தன்று நடந்த இந்த சம்பவத்தால் மும்பையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications