For Daily Alerts
Just In
ஸ்ரீவைகுண்டம் தேமுதிக செயலர் அலுவலகத்துக்கு தீ
ஸ்ரீவைகுண்டம்: இடைத் தேர்தல் நடக்கும் ஸ்ரீவைகுண்டத்தில் தேமுதிக நகரச் செயலாளரின் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தேமுதிக நகரச் செயலாளராக உள்ள சின்னதம்பியின் அலுவலகத்துக்கு முன் இருந்த பந்தலுக்கு நேற்றிரவு யாரோ தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து சின்னதம்பி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இடைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் காரணமாக திமுகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சின்னதம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
Comments
Story first published: Tuesday, August 4, 2009, 12:45 [IST]