தமிழகம் அனுப்பும் 4வது கட்ட நிவாரண பொருட்கள்
சென்னை: இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 4வது கட்டமாக ரூ. 15 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் நாளை மறுதினம் அனுப்ப்படுகின்றன.
இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை 3 முறை நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், துணிகள் அனுப்பி வைக்கப்பட்டன. 2வது கட்டமாக ரூ.6.62 கோடி மதிப்புள்ள பாத்திரங்கள், உணவு ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.
3வது கட்டமாக ரூ.6.90 கோடி மதிப்புள்ள உணவு, துணி மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இந் நிலையில் இப்போது 4வது கட்டமாக ரூ.15 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதில்
சமையல் பாத்திரங்கள், தட்டுக், மளிகைப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், பிளாஸ்டிக் கேன், செருப்புள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி- சேலை, லுங்கி, நைட்டி, போர்வைகள் ஆகியவை அடங்கும். 100 கண்டெய்னர்களில் இந்தப் பொருட்கள் ஏற்றப்படும்.
சென்னை துறைமுகத்தில் இருந்து 6ம் தேதி எம்.சி.ஆம்ஸ்டர்டாம் என்ற நிவாரணக் கப்பலில் இந்தப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இந்தக் கப்பல் 8ம் தேதி காலை கொழும்பு துறைமுகம் சென்றடையும்.
இதையடுத்து இந்த நிவாரணப் பொருட்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் பெற்று ஐ.நா.சபை மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு வழங்கும்.












Click it and Unblock the Notifications