ஜனநாயகத்துக்காக தேர்தலை புறக்கணிக்கும் ஜெ!

கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடிகள் செய்ய முடியும் என்று பல வருடங்களாக நான் கூறி வந்துள்ளேன்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையடுத்து பாஜக, தெலுங்கு தேசம், பாமக மற்றும் இதர கட்சிகள் மின்னணு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று குரல் கொடுத்து வருகின்றன. பாமக இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்யது என்பது முடியாத காரியம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.
இதில், எவ்வளவு சுலபமாக மோசடிகள் நிகழ்த்த முடியும் என்பதை அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கணினி பாதுகாப்புச் சட்டம் படிக்கும் மாணவர்கள் அனுபவப்பூர்வமாக கற்று வருகின்றனர்.
வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை சரிபார்க்கக்கூடிய வகையில் அச்சிடப்பட்ட தகவலை உருவாக்காத வரையில் மோசடி குறித்த புகார்களின் உண்மையை கண்டுபிடிக்க முடியாது.
வாக்குப் பதிவு எந்திரங்களில் மிக எளிதாக மோசடி செய்யலாம் என்பதை ஹைதராபாத்தை சேர்ந்த ஜன் சைதன்ய வேதிகா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற கணினி பொறியாளர் 2.8.2009ம் தேதியன்று தெளிவுபடுத்திக் காட்டிய பத்திரிகைச் செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் மட்டுமில்லாமல் பொதுமக்களும் இந்த உண்மையை உணர வேண்டும். அவர்களின் வாக்குகள் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலை இல்லாதபட்சத்தில் ஜனநாயக முறைகள் அனைத்தும் கேலிக்கூத்தாகவே இருக்கும். உண்மையான ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டும் என்பதை உறுதி செய்யத்தான் தமிழகத்தில் நடைபெறும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்தது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
முன்பு தேர்தல்களில் வென்றபோதெல்லாம் ஏன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்பதை ஜெயலலிதா சுட்டிக் கட்டவில்லை என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications