2 நாள் வங்கி ஸ்டிரைக் தொடங்கியது - மக்களுக்குப் பாதிப்பு

ஊதிய உயர்வு, ஊனமுற்ற அல்லது பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் அவர்களது வாரிசுகளுக்க வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அனைத்து வங்கிகள் சங்கங்களும் அறிவித்திருந்தன.
இதையடுத்து மத்திய அரசு, சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.
அதன்படி இன்று காலை ஸ்டிரைக் தொடங்கியது. நாளை வரை இந்த ஸ்டிரைக் நடைபெறும்.
இந்த ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் அனைத்து அரசுத் துறை வங்கிகளும் மூடப்படட்டுள்ளன. ஏடிஎம் மையங்கள் மட்டும் காலையில் செயல்படுகின்றன. இருப்பினும் இன்று மாலைக்குள் அவற்றில் பணம் தீர்ந்து போகும் அபாயம் உள்ளது.
வங்கிச் சேவைகள் அனைத்தும் 2 நாட்களுக்கு கிடையாது என்பதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications