போதையில் கார் ஓட்டிய பெண் மாஜிஸ்திரேட் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடிபோதையில் கார் ஓட்டிய பெண் மாஜிஸ்திரேட்டு விபத்தில் பலியானார்.
டெல்லியை சேர்ந்தவர் மீரா ( 44) சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் குடிபோதையில் அவுட்டர் டெல்லி பகுதியில் காரை ஓட்டிச் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்தின் பின் பகுதியில் மோதியது.
இதில் மீரா பலத்த காயமடைந்து காரின் இருக்கையிலேயே பலியானார். ஆனால், இவரால் மோதப்பட்ட வாகனம் அங்கிருந்து தப்பிவிட்டது.
விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த மீராவுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.












Click it and Unblock the Notifications