திருச்சிக்கு வடக்கே கூட்டணியின்றி போட்டியிட அழகிரி தயாரா - விஜயகாந்த பதிலடி
இளையாங்குடியில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, விஜயகாந்த்துக்குத் தைரியமிருந்தால், மதுரையில், என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்று சவால் விட்டிருந்தார்.
அதற்கு உடனடியாக பதில் சவால் விட்டுள்ளார் விஜயகாந்த். ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து, புதுக்கோட்டை என்ற இடத்தில் இன்று பிரசாரம் தொடங்கிய விஜயகாந்த் பேசுகையில் இந்த சவாலை விடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில், மதுரையில் போட்டியிட தயாரா என்று எனக்கு சவால் விட்டுள்ளார் அழகிரி.
அவருக்கு நான் கூறிக் கொள்கிறேன். எனது சொந்த ஊரான மதுரை, அவருடைய சொந்த ஊரான திருவாரூர் தவிர்த்து, திருச்சிக்கு வடக்கே, பொதுவான ஒரு தொகுதியில், ஆட்சி அதிகாரம், பணம், கூட்டணியின்றி, தனித்துப் போட்டியிட அழகிரி தயாரா என்பதைச் சொல்லட்டும் என்று பதில் சவால் விடுத்தார் விஜயகாந்த்.