கேபி கைது விவகாரம் - விசாரணைக்கு தாய் பிரதமர் உத்தரவு

கேபி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் இதை தாய்லாந்து பிரதமர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேபி கைது குறித்து எனக்கு நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அனைத்து விவரங்களையும் எனக்கு அளிக்குமாறு பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
தாய்லாந்து அரசின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் பானிடன் வட்டநாயக்கோன் கூறுகையில், முதலில் கிடைத்த செய்திகளின்படி தாய்லாந்துக்குள் கேபி அவ்வப்போது சென்றதாக தெரிகிறது. இருப்பினும் அவர் தாய்லாந்துக்குள் வைத்துக் கைது செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தாய்லாந்துப் பெண்ணைத்தான் கேபி மணந்துள்ளார். தாய்லாந்தின் வட பகுதியில் அவர் வசித்து வந்தார் என்றார்.
சிங்கப்பூரில் கைதா...?
தாய்லாந்து சிறப்புப் போலீஸ் பிரிவு தலைவர் தீரதேஜ் ரோட்போட்டாங் கூறுகையில், உண்மையில் சிங்கப்பூரில் வைத்துத்தான் கேபி கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் அவர் கைதாகவில்லை.
கேபியின் மனைவி தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி விட்டன. ஆனால் அவர் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடிக்கடி போய் வருவது வழக்கம் என்றார்.
ராணுவத்தின் தீவிர விசாரணையில் கேபி...
இதற்கிடையே கொழும்பு கொண்டு வரப்பட்டுள்ள கேபியிடம் ராணுவ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications