திமுக அரசின் சாதனைகளை மக்கள் பாராட்டுகிறார்கள்: மு.க.ஸ்டாலின்
தேக்கடி: திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை மக்கள் பாராட்டுகிறார்கள், வரவேற்கிறார்கள். தொடர்ந்து நிகழ்த்தப் போகும் சாதனைகளைக் காண ஆவலாக உள்ளனர் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கம்பம்த தொகுதியில் 2 நாள் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தேக்கடியில் இரவில் தங்கினார்.
நேற்று தனது இரண்டாவது நாள் பிரசாரத்தை தொடங்குவதற்காக புறப்பட்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஸ்டாலின் கூறுகையில், கடந்த பொதுத்தேர்தல், பாராளுமன்ற தேர்தலை விட மக்கள் அதிக ஆவலுடனும், எழுச்சியுடனும் உள்ளனர். கடந்த 3 ஆண்டு கால சாதனைகளை பெரிதும் வரவேற்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. தமிழகத்தின் உரிமையை எந்த வித காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இரு மாநில பிரச்சினைகளை அனுசரித்து, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.