உத்தரகாண்ட்டில் பயங்கர நிலச்சரிவு: 43 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெஹ்ராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 43 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதி்ல் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்திய-திபெத் எல்லையில் உள்ள ஜேத்தலன், லா, மாதி ஆகிய கிராமங்கள் சரிந்து வந்த மண், பாறைகளில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமங்கள் முழுமையாகவே அழிந்துவிட்டன. பேய் மழையால் ஒரு சிறிய மலையே அப்படியே சரிந்துவிட்டது.
இதில் 43 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்தவுடன் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 15 உடல்கள மீட்கப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications