ஏரியில் 4 வழிச்சாலை-கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏரியின் நடுவே நான்கு வழிச் சாலை அமைப்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் திருச்சியில், 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புங்கனூர் கிராமத்தில் சுமார் 360 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நடுவே தற்போது நெடுஞ்சாலைத் துறையால் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது.
இதைக் கண்டித்து திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்டக் கழகங் களின் சார்பில், 11-ந் தேதி காலை 10.30 மணி அளவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications