ஈவ் டீசிங்: மொட்டை, செருப்பு மாலை-ஒரிசா மாணவிகள் துணிச்சல்
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் கல்லூரி முன் நின்று கொண்டு மாணவிகளை ஈவ் டீசிங் செய்த இரண்டு வாலிபர்களுக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு மாணவிகள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். மாணவிகளின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் கைபதர் என்ற பகுதியில் பெண்கள் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரிக்கு முன்னதாக தாகா படேல் (22), பிரபுல்லா புயன் (23) என்ற இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு மாணவிகளை கேலி, கிண்டல் செய்தனர்.
இவர்களது நடவடிக்கை அத்துமீற கல்லூரி மாணவிகள் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால், பஞ்சாயத்தார் அந்த இரண்டு மாணவர்களையும் எச்சரித்து விட்டு விட்டனர். ஆனால், அந்த வாலிபர்கள் கல்லூரி மாணவிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தனர்.
இதையடுத்து கல்லூரி மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். ஆனால், அதற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவிகள் அந்த வாலிபர்களுக்கு தாங்களே நல்ல பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து வழக்கம் போல் கல்லூரி வாசலில் நின்று மாணவிகளை ஈவ் டீசிங் செய்து கொண்டிருந்த அவர்களை 100க்கும் மேற்பட்ட மாணவிகள் சுற்றி வளைத்தனர். அவர்கள் இருவரையும் கல்லூரிக்குள் அழைத்து சென்று, அவர்களுக்கு மொட்டை அடித்தனர்.
பின்னர் அவர்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த இரண்டு வாலிபர்களும் இனி மேல் இது போல் செய்ய மாட்டோம் என கூறிய பின்னர் அவர்களை விடுவித்தனர்.
ஈவ் டீசிங் செய்தவர்களை சமூகம் தட்டிக் கேட்காததால், அந்தப் பணியை தாங்களே செய்த மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications