தமிழகத்தில் 3 மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் டமிஃப்ளூ

சென்னையில் இன்று 4 வயது சிறுவன் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளான். இதையடுத்து நாளை உயர் மட்டக் குழுக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.
இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் வந்தோர் பயன்படுத்தக் கூடிய டமிஃப்ளூ மாத்திரைகள் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூட கிடைக்காத நிலை காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் மட்டுமே இந்த மாத்திரை கிடைக்கிறது.
அதேசமயம், முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூட இந்த மாத்திரை கிடைக்காத நிலை காண்படுகிறது.
மாவட்ட மருத்துவமனைகளுக்கு இந்த மாத்திரைகளை போதிய அளவில் சப்ளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டும் கூட இன்னும் அந்தப் பணியை சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விடவில்லை.
மேலும் பன்றிக் காய்ச்சல் தொடர்பான விழி்ப்புணர்வுத் தகவல்கள், பிரசாரம் போன்றவற்றையும் இன்னும் தமிழக அரசின் சுகாதாரத் துறை முடுக்கி விடவில்லை. இதனால் மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதிகள் அல்லது தேவையில்லாமல் சிலர் பீதியைக் கிளப்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டமிஃப்ளூ மாத்திரைகளை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்குவதோடு, பன்றிக் காய்ச்சல் தொடர்பான தேவையற்ற பீதிகளைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications