இடைத்தேர்தலில் '49 ஓ' போடுவோம்-கிருஷ்ணசாமி
தூத்துக்குடி: இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி வாக்காளர்கள் 49 ஓ முறையை பயன்படு்த்தி தங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிப்பார்கள் என அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
முக்கிய கட்சிகளான அதிமுக, மதிமுக, பாமக ஆகியவை இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்ட நிலையில் திமுக போட்டிடுக்கு சரியான ஆளில்லாததால் எளிதாக வெற்றி பெறும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் நடக்கும் தேர்தல் கேலி கூத்தாகிவிட்டது. பொதுதேர்தலும், இடைத்தேர்தலும் அப்படி தான் இருக்கிறது.
பணம் கொடுப்பதை தடுப்பதும், பணம் வாங்க மறுப்பதும் தான் தற்போது புதிய தமிழகம் கட்சியின் முடிவு. எங்கள் கட்சியினர் வாக்கு சாவடிக்கு சென்றால் 49 ஓ முறையை பயன்படுத்துவார்கள் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications