ஈ ஆடும் தனியார் பி.இ. கல்லூரிகள்-31 ஆயிரம் சீட் காலி
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை இம்முறை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கவுன்சிலிங் முடிந்த நிலையில் பலவற்றில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இங்கு சுமார் 31 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது. 1 லட்சத்து 9 ஆயிரத்து 829 இடங்களுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங் முடிவில் 78 ஆயிரத்து 664 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள சுமார் 31 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கின்றன.
இது கடந்த ஆண்டு சேர்க்கையை (75 ஆயிரத்து 92) விட சுமார் 3 ஆயிரத்தும் கூடுதலாக இருந்தாலும், இந்த ஆண்டு புதிததாக 92 கல்லூரிகள் திறக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், தமிழகத்தில் இருக்கும் 440 பொறியியல் கல்லூரிகளில் 26ல் தான் அனைத்து சீட்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இவற்றில் 24 அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்.
இந்த கல்லூரிகளில் இருந்த 10 ஆயிரம் சீட்கள் முடிந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 32 தனியார் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். அந்த கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்றார் மன்னர் ஜவஹர்.
இதை தவிர்த்து, 135 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அரசு பொறியியல் நிறுவனங்களுக்கு நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. 38 அரசு கல்லூரிகளல் 99 சதவீதத்துக்கு மேலான இடங்கள் நிரம்பிவிட்டன.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் வி.கே.ஜெயகொடி கூறுகையில்,
தற்போது காலியாக இருக்கும் சீட்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கடைசி நாள் என்றார் அவர்.
இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் உடனடி மறு தேர்வின் மூலம் தேறிய சுமார் 880 மாணவர்கள் இன்று கவுன்சிலிங்கில் கலந்து கொள்கி்ன்றனர்.
நாளை அருந்ததியர் உள் ஒதுக்கிட்டில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதன் பின்னரும் சுமார் 30 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications