ஈ ஆடும் தனியார் பி.இ. கல்லூரிகள்-31 ஆயிரம் சீட் காலி
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை இம்முறை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கவுன்சிலிங் முடிந்த நிலையில் பலவற்றில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இங்கு சுமார் 31 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது. 1 லட்சத்து 9 ஆயிரத்து 829 இடங்களுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங் முடிவில் 78 ஆயிரத்து 664 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள சுமார் 31 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கின்றன.
இது கடந்த ஆண்டு சேர்க்கையை (75 ஆயிரத்து 92) விட சுமார் 3 ஆயிரத்தும் கூடுதலாக இருந்தாலும், இந்த ஆண்டு புதிததாக 92 கல்லூரிகள் திறக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், தமிழகத்தில் இருக்கும் 440 பொறியியல் கல்லூரிகளில் 26ல் தான் அனைத்து சீட்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இவற்றில் 24 அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்.
இந்த கல்லூரிகளில் இருந்த 10 ஆயிரம் சீட்கள் முடிந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 32 தனியார் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். அந்த கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்றார் மன்னர் ஜவஹர்.
இதை தவிர்த்து, 135 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அரசு பொறியியல் நிறுவனங்களுக்கு நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. 38 அரசு கல்லூரிகளல் 99 சதவீதத்துக்கு மேலான இடங்கள் நிரம்பிவிட்டன.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் வி.கே.ஜெயகொடி கூறுகையில்,
தற்போது காலியாக இருக்கும் சீட்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கடைசி நாள் என்றார் அவர்.
இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் உடனடி மறு தேர்வின் மூலம் தேறிய சுமார் 880 மாணவர்கள் இன்று கவுன்சிலிங்கில் கலந்து கொள்கி்ன்றனர்.
நாளை அருந்ததியர் உள் ஒதுக்கிட்டில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதன் பின்னரும் சுமார் 30 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications