குற்றாலத்தில் மாரடைப்பால் சுற்றுலா பயணி பலி
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்தார்.
நாமக்கல் அருகில் உள்ள பரமத்திவேலூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வக்கீல் தொழில் செய்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலரும் பஸ்சில் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அருவியில் குளித்தனர்.
பாலகிருஷ்ணன் மெயின் அருவிக்கு செல்லும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நடுரோட்டில் சுருண்டு விழுந்தார்.
இதுகுறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் விரைந்து சென்று பாலகிருஷ்ணனை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
பாலகிருஷ்ணன் இறந்ததை கண்டு அவருடன் வந்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இறந்தது.












Click it and Unblock the Notifications