ஸ்வைன் மேலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் - அமெரிக்க நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பன்றிக் காய்ச்சல் அடுத்த சுற்று தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இம்முறை உலக நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பேரை அது பாதிக்கும் என்று அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகளை பன்றிக் காய்ச்சலை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் வரும் நாட்களில் பன்றிக் காய்ச்சல் உலக நாடுகளில் பல லட்சம் பேரை பாதிக்கும், கடும் விளைவுகளை அது ஏற்படுத்தும் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷாப்னர் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் வைரஸ் இன்னும் அழியவில்லை. அது உலக நாடுகளை வரும் நாட்களில் மிக மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

2வது சுற்று பாதிப்புக்கு அது தயாராகி வருகிறது. இதை எதிர்கொள்ள உலக நாடுகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பல லட்சம் பேரை அது பாதிக்கும் அபாயம் உள்ளது. மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றார்.

இதற்கிடையே, வட அமெரிக்க தலைவர்கள் மெக்சிகோவில் கூடி பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். வட அமெரிக்க கண்டத்தில் 2வது சுற்று பன்றிக் காய்ச்சல் பரவல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+