For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாசில்தாரை மிரட்டிய தேமுதிகவினர் மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

கூடலூர்: தேர்தல் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்சி கொடி, தோரணம் ஆகியவற்றை அகற்ற கூறிய தாசில்தாரை தேமுதிகவினர் மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூடலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேமுதிகவினர் கட்டிய கட்சிக் கொடி, தோரணங்கள் ஆகியவற்றை அகற்றுமாறு தேனி தாசில்தார் அப்துல், கூடலூர் நகராட்சி கமிஷனர் வெற்றியரசு கூறியுள்ளனர்.

அப்போது அவர்களுக்கும் தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில், தாசில்தார் அப்துல்லை தேமுதிகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (32) உட்பட சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாசில்தார் அப்துல் கூடலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் போரில் தேமுதிகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட முக்கிய நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X