துண்டு போட்டு கோவிலில் கொள்ளை-5 மாதம் சிறை

Subscribe to Oneindia Tamil

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலுக்குள் ஈரத் துண்டை உள்ளே விட்டு அதில் ஒட்டிவரும் நோட்டுக்களை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 5 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் சந்திரகிரி பெத்தபேட், பிடிஐ காலனியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் ஜெமினிகணேசன் (32). இவர் பல நாட்களாக திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் நூதனமான முறையில் பணத்தை திருடி வந்துள்ளார்.

அவர் கோயிலில் யாரும் இல்லாத சமயத்தில் உண்டியலுக்குள் ஈரத்துண்டை போடுவார். பின்னர் அதில் ஒட்டி வரும் பணத்தை எடுத்து கொண்டு போய்விடுவார். தினமும் இப்படி பல முறை செய்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப கடந்த 17.2.2009ம் அன்று அவர் வழக்கம் போல் துண்டை நனைத்து பணத்தை எடுத்து கொண்டிருந்த போது கோவில் இணை ஆணையராக இருந்த தனபாலிடம் கையும், களவுமாக மாட்டினார்.

இதையடுத்து அவர் திருத்தணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிவு செய்து ஜெமினி கணேசனை செய்து சிறையில் அடைத்தார்.

தற்போது வழக்கு திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முத்துக்குமாரி முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி ஜெமினி கணேசனுக்கு 5 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+