பன்றிக் காய்ச்சல் சந்தேகம்-11 பேருக்கு டாமிப்ளூ மாத்திரை!
சென்னை: சென்னை நகரில் தும்மல், சளி, வறட்சியான தொண்டை, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள 11 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை தொடங்கியுள்ளது.
பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள ஒரே மருந்து டாமிப்ளூதான். ஆனால் இதனை சரமாரியாக பயன்படுத்தினால் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருக்கும் 11 பேருக்கு டாமிப்ளூ மாத்திரைகளை கொடுத்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் அவர்களுக்கு டமி்ப்ளூவை கொடுக்குமாறு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், சந்தேகம் இருந்தால் உடனடியாக டாமிப்ளூவைக் கொடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனராம்.
ஆனால் இதனால் நோயாளிகளுக்கு கடும் பக்க விளைவுகள், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என சில டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேவையில்லாமல் டம்பிளூவை பயன்படுத்தினால் நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து போய் விடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், பன்றிக் காய்ச்சலினால் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் உரிய மருந்து உரிய நேரத்தில் கொடுக்கப்படாத காரணத்தால்தான் இறந்துள்ளனர். தொண்டைச் சளி சோதனை முடிவுகள் தெரிய வர நாள் ஆகும். அதுவரை காத்திருந்தால், உயிரிழ்ப்புகளைத் தவிர்க்க முடியாமல் போய் விடும் என்று விளக்கியுள்ளார்.
இதற்கிடையே, பரிசோதனை சாதனங்களை கூடுதலாக கொடுக்க வேண்டும் என அரசுக்கு கிங் இன்ஸ்டிடியூட் கோரிக்கை விடுத்துள்ளது. அப்போதுதான், பரிசோதனைகளை விரைவாக செய்து முடிவுகளை வேகமாக அறிவிக்கலாம் என்று அது கூறியுள்ளது.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications