ஸ்ரீவைகுண்டம் இடைதேர்தல்-தலைவர்கள் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஆகஸ்ட் 16ம் தேதியுடன் பிரசாரம் முடிவடைவதால், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைதேர்தல் ஆகஸ்ட் 18ம் தேதியன்று நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனைத்து கட்சியினரும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரி்த்து இன்று தமிழக காங் கமிட்டி தலைவர் தங்கபாலு மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் ஊர் ஊராக ஆதரவு திரட்டுகின்றனர். தங்கபாலு நாளையும் பிரச்சாரம் செய்கிறார். இதனால் திமுக, காங் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தேமுதிக சவுந்திரபாண்டியனை ஆதரித்து பிரேமலதா இன்றும், நாளையும் பர்கூர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனால் அக்கட்சியினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய கம்யூ கட்சியினரும் தங்கள் பாணியில் துவக்கம் முதலே வலம் வருகின்றனர். தா.பாண்டியன், நல்லகண்ணு போன்றோர் ஏற்கனவே பிரச்சாரம் செய்துள்ள நிலையில் தொடர்ந்து வேட்பாளர் தனலெட்சுமி குக்கிராமங்களில் கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபோல் பாஜக வேட்பாளர் சந்தனகுமாரும் தன் பங்குக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தொகுதி முழுவதும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+