சுதந்திர தின பாதுகாப்பு-ரயில்களில் பார்சலுக்கு தடை
சென்னை: சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே ஊழியர்கள் சந்தகேத்துக்குரிய பார்சல்களை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திரம் தினம் வெகு விமர்சிகையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழா கொண்டாட்டங்களுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தீவிரவாதிகள் தங்களது பயங்கரவாத செயலுக்கு ரயில்வே துறையை பயன்படுத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மக்கள் நெரிசல் அதிகம் கொண்ட ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் நாளை 14.08.2009 முதல் 17.08.2009 வரை நான்கு நாட்களுக்கு ரயில்வே ஊழியர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு கேட்டு கொண்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் பார்சல்களை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து வகையான பார்சல்களையும் தீவிர பரிசோதனைக்கு பின்னர் அனுப்புமாறு கூறியுள்ளது. ரயில் பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் ஆகியோரை 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications