சுதந்திர தின பாதுகாப்பு-ரயில்களில் பார்சலுக்கு தடை
சென்னை: சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே ஊழியர்கள் சந்தகேத்துக்குரிய பார்சல்களை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திரம் தினம் வெகு விமர்சிகையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழா கொண்டாட்டங்களுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தீவிரவாதிகள் தங்களது பயங்கரவாத செயலுக்கு ரயில்வே துறையை பயன்படுத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மக்கள் நெரிசல் அதிகம் கொண்ட ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் நாளை 14.08.2009 முதல் 17.08.2009 வரை நான்கு நாட்களுக்கு ரயில்வே ஊழியர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு கேட்டு கொண்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் பார்சல்களை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து வகையான பார்சல்களையும் தீவிர பரிசோதனைக்கு பின்னர் அனுப்புமாறு கூறியுள்ளது. ரயில் பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் ஆகியோரை 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications