20,000 எச்1பி விசாக்கள்-விண்ணப்பிக்க ஆளில்லை!
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு பணிக்கு செல்வோர் பெற வேண்டிய எச்1பி விசாக்களில், 20 ஆயிரம் விசாக்களைப் பெற விண்ணப்பங்களே வரவில்லை என அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் அக்டோபர் மாதம் துவங்கும் 2010-ம் நிதியாண்டில், அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டினருக்காக 65 ஆயிரம் எச்1பி விசாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இவற்றிற்கு கடந்த 7-ம் தேதி வரை, 49 ஆயிரம் விண்ணப்பங்களே வந்துள்ளன. 20 ஆயிரம் விசாக்களுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
பொதுவாக இந்த எச்1பி விசா அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஏராளமான விண்ணப்பங்கள் குவிவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதங்களாக, தொடர்ந்து 20 ஆயிரம் எச்1பி விசாக்கள் காலியாக இருந்து வருகின்றன.
ஏராளமான விண்ணப்பங்களை நாங்கள் நிராகரித்தது ஒரு காரணம் என்றாலும், வழக்கமாக வரும் அளவு விண்ணப்பங்கள் வரவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை, என்றனர்.
இதர்கு முன், அமெரிக்க பொருளாதாரம் ஓஹோவென இருந்த காலங்களில், எச்1பி விசாவிற்காக விண்ணப்பித்தவர்களை, கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தது நினைவிருக்கலாம்.