ஸ்வைன் ப்ளூ: பெங்களூரில் 'பிரா மாஸ்க்'!

இந் நிலையில் பெங்களூரில் ஒரு பத்திரிக்கை நிருபர், பெண்களின் பிராவை இரண்டாக வெட்டி அதை முகக் கவசம் போல மாற்றி விற்றபோது அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றுள்ளனர். அது பிரா என்று தெரியாமல் பலரும் வாங்கி முகத்தில் மாட்டிக் கொண்டனர்.
முகக் கவசங்கள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை தான் என்றாலும் முறையான 'மெடிக்கல் மாஸ்குகளால்' தான் அது சாத்தியம். அதுவும் அந்த முகக் கவசங்களை தினமும் மாற்றிவிட வேண்டும். ஒரே முகக் கவசத்தை மாதக் கணக்கில் அணிவது நோய் பரவலுக்கே வழி வகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆனால், ஸ்வைன் ப்ளூ பீதி காரணமாக வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட மெடிக்கல் மாஸ்குகள் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இந் நிலையில் எவ்வளவு காசைத் தந்தாலும் அவை கிடைப்பதும் அரிதாகிவிட்டது.
இந் நிலையில் முகக் கவசம் எதை விற்றாலும் மக்கள் முண்டியடித்தக் கொண்டு வாங்க ஆரம்பித்துள்ளனர். பெங்களூரில் சிவாஜி நகர், இப்ராகிம் சாகிப் தெரு பகுதியில் உள்ள சாதாரண டெய்லர் கடைகளில் சாதாரண துணிகளக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான முகக் கவசங்கள் தைக்கப்பட்டு நகர் முழுவதும் விற்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கவசங்களால் எந்தவிதத்திலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மக்களிடையே முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளதை என்பதை அறிய பெங்களூரில் ஒரு பத்திரிக்கை நிருபர் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'பிரா மாஸ்க்கை' விற்றுப் பார்த்தார். ஒரு மணி நேரத்தில் அவர் கொண்டு சென்ற 'பிரா மாஸ்குகள்' அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தன்னிடம் அதை வாங்கியவர்களை உடனுக்குடன் அவரே விரட்டிச் சென்று உண்மையைச் சொல்லி காசையும் திருப்பித் தந்துவிட்டார் அந்த நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications