மூளைச்சாவு-திருச்சி மாணவன் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி: திருச்சியில் சாலை விபத்தில் மூளைச்சாவை சந்தித்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை அவனது பெற்றோர் தானமாக வழங்கினர்.
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு நிர்மல்குமார்(13), பத்மநாபன் என இரு மகன்கள்.
மூத்த மகன் நிர்மல்குமார் கரூரில் இருக்கும் தனது தாத்தா வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வார விடுமுறைக்காக பெற்றோரை பார்க்க தனது தாத்தாவுடன் திருச்சி வந்த நிர்மல் குமார் 9ம் தேதி இரவு காரில் கரூர் திரும்பினர்.
அவருடன் தாத்தா மணி, பாட்டி லெட்சுமி, அத்தை சியாமளா ஆகியோர் சென்றனர். இந்நிலையில் கார் பெருகமணி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது கரூரில் இருந்து திருச்சி நோக்கி ஜல்லி கற்களை கொண்டு சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சியாமாளா, கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்கள். மற்ற மூவரும் பலத்த காயத்துடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மூன்று நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் மாணவன் நிர்மல்குமார் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து டாக்டர்கள் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனின் தந்தை வைத்தியநாதன் தனது மகனின் உடல் உறுப்பகளை தானம் வழங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த சிறுவனின் உடல் திருச்சி ஏபிசி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுவனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன. அவரது கல்லீரல் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மற்ற உறுப்புகள் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தானமாக வழங்கப்பட இருக்கிறது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications