For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான எரிபொருள் விலை 4.5 சதவீதம் உயர்வு!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: விமான நிறுவனங்கள் நஷ்டம், பெய்ல் அவுட் என புலம்பிக் கொண்டிருக்க அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருளுக்கான விலையை 4.5 சதவீதம் உயர்த்தியுள்ளன. சனிக்கிழமை இரவு முதல் இந்த திடீர் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்றவை ஏவியேஷன் டர்பைன் ப்யூயல் எனப்படும் ஏடிஎப் விலையை கிலோ லிட்டருக்கு ரூ.1,662 வரை உயர்த்திவிட்டன. இதன்மூலம் ஒரு கிலோ லிட்டர் விமான பெட்ரோல் விலை ரூ.38,585 (டெல்லி) ஆக உயர்ந்துள்ளது. அதுவே சென்னையில் ரூ.42,605 ஆகும். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரூ.46,819 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 74 டாலராக உயர்ந்துவிட்டது. எனவே இந்த விலை உயர்வு தவிரக்க முடியாதது என இந்நிறுவனங்கள் காரணம் தெரிவித்துள்ளன.

இதனால் விமானக் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X