இடைத் தேர்தலுக்கு 1000 வெளி மாநில போலீசார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா, கர்நாடகம் மாநிலங்களை சேர்ந்த 1,000 போலீசார் வந்துள்ளனர்.
இவர்கள் தலா 200 பேராக 5 தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்படுவர்.
தமிழகத்தி்ல் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பம் தொகுதிக்கு மட்டும் 4 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் தமிழக போலீஸ்:
இதற்கிடையே 18ம் தேதி பெங்களூர் கோவிந்தராஜ் நகரில் நடக்கும் இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 100 தமிழக போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications