ஓய்ந்தது இடைத்தேர்தல் பிரச்சாரம்-நாளை மறுதினம் வாக்குப் பதிவு
பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலை அதிமுக கூட்டணி புறக்கணித்துள்ளது. ஆனால், அக் கூட்டணியைச் சேர்ந்த இடதுசாரிகள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்,
பர்கூர்:
திமுக-கே.ஆர்.கே.நரசிம்மன்
தேமுதிக-வி.சந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட்-எஸ்.கண்ணு
பாஜக-கி.அசோகன்
சுயேச்சைகள்-5 பேர்
தொண்டாமுத்தூர்:
காங்கிரஸ்-என்.கந்தசாமி
தேமுதிக-தங்கவேலு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- வே.பெருமாள்
பாஜக-சின்னராசு
சுயேச்சைகள்-18 பேர்
கம்பம்:
திமுக-ராமகிருஷ்ணன்
தேமுதிக-அருண்குமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ராஜப்பன்
சுயேச்சைகள்-12 பேர்
இளையான்குடி:
திமுக-சுப.மதியரசன்
தேமுதிக-அழகு பாலகிருஷ்ணன்
பாஜக-ராஜேந்திரன்
சுயேச்சைகள்-6 பேர்
ஸ்ரீவைகுண்டம்:
காங்கிரஸ்-எம்.பி.சுடலையாண்டி
தேமுதிக-எம்.சவுந்தரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட்-ஞா.தனலட்சுமி
பாஜக-அ.சந்தனகுமார்
சுயேச்சைகள்-8 பேர்
இந்தத் தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ப.சிதம்பரம், கனிமொழி எம்.பி, காங்கிரஸ் தலைவர்கள், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
இந் நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பிரச்சாரம் ஓய்ந்தது. வரும் 8ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அன்று காலை 11 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும்.