சுதந்திர தின கொண்டாட்டம்-தடை விதித்த 'நீல் மெட்டல்' நிறுவனம்
சென்னை: சென்னையில் கழிவுகளை அகற்றும் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் சுதந்திர தினத்தை கொண்டாட தங்கள் ஊழியர்களுக்கு அனுமதி தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஓனிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிந்த நிலையில் அடுத்த வாய்ப்பு நீல் மெட்டல்-பனால்கா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிறுவனம் டெல்லியை சேர்ந்த நீல் மெட்டல் மற்றும் கொலம்பியா நாட்டை சேர்ந்த பனால்கா நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 3,000 துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் இருக்கும் தலைமை அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு நிர்வாகம் அனுமதி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிறுவனம் மறுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஸ் லக்கானி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications