Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்காது - கம்யூ.வுக்கு எதிர்காலம் கிடையாது: தங்கபாலு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நடைபெற உள்ள இடைத் தேர்தலில் தேமுதிக டிபாசிட் கூட வாங்க முடியாது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலமே கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரித்து, நேற்று மாலை ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரசார நிறைவு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசியதாவது ..

இந்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது என, தெரிந்து விட்டதால் தான் ஜெயலலிதா தேர்தலை புறக்கணித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.

எனவே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரு ஜெயலலிதா அல்ல, ஓராயிரம் ஜெயலலிதாவும் வந்தாலும் இனி அரசியல் நடத்த முடியாது.

தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளுக்கும், நடிகர் கட்சிகளுக்கும் இடமில்லை என்ற தெளிவான தீர்ப்பை நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் தந்துள்ளனர்.

கடந்த தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட டிபாசிட் வாங்கவில்லை. இனியும் அக் கட்சியால் டிபாசிட் வாங்க முடியாது.

தென் தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் சேது சமுத்திர திட்டத்தில், 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன. சுப்ரீம் கோர்ட்டிலுள்ள தடையை நீக்கி மீதமுள்ள 25 சதவீத பணிகளும் விரைந்து முடிக்கப்படும்

கம்யூ.க்களுக்கு இனி எதிர்காலம் கிடையாது...

காங்-திமுக கூட்டணி பலமான கூட்டணி. இது தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு காரணம் இதன் சாதனைகள்தான். கடந்த 2004ல் தொடங்கிய கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியைதான் பெற்று வருகிறது. இந்தியாவை வளரும் நாடுகளில் முதன்மையாக மாற்றிய பெரு்மை இந்த கூட்டணிக்கே சேரும். சோனியாவை அடுத்த பிரதமர் என்று முதலில் அறிவித்தது தமிழக முதல்வர்தான். இதை மறக்க மாட்டோம். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு போட்டி போட்டு பணிகளை செய்கிறது.

தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஆட்சியில் 56 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்கள் வந்தது. வேறு எந்த மாநிலத்திற்கும் இந்த பெருமை கிடையாது. அதற்கு இந்த கூட்டணி தான் காரணம்.

கடந்த 5 ஆண்டுகளில் 69 திட்டங்கள் நிறைவவேற்றப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வளம் இல்லை என்றார்கள். 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அனல் மின் மின்சார நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட உள்ளது.

அதனால்தான் அதிமுக போன்ற கட்சிகள் இன்று களத்தில் எங்கள் கூட்டணியை சந்திக்க பயப்படுகின்றன. 5 தொகுதிகளிலும் திமுக-காங் கூட்டணி வெற்றி பெருவது உறுதி.

கம்யூனிஸ்டுகளுக்கு தமிழகத்தில் இனி எதிர்காலம் இல்லை. அவர்கள் தேய்பிறையாக போய்விட்டார்கள். இனி ஜாதி கட்சிகளுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் கடந்த தேர்தலில் நிரூபித்து விட்டார்கள் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+