ரஷ்யாவில் குண்டு வெடிப்பு-19 பேர் பலி
மாஸ்கோ: தெற்கு ரஷ்யாவின் நஸ்ரான் நகரில் இன்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 19 பேர் பலியாயினர்.
ரஷ்யாவின் ஆளுமையில் உள்ள இன்குசெடியா குடியரசின் தலைநகரான நஸ்ரானி்ல் நடந்த இந்தத் தாக்குதலி்ல் குழந்தைகள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
செசன்யாவை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் நடந்துள்ள தாக்குதலுக்கு செசன்ய தீவிரவாதிகளே காரணம் என்று கருதப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் கோரி செசன்யாவில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் குண்டு வெடித்து 10 பேர் பலி:
அதே போல பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் அருகே ஷாப்குவாடர் நகரில் மலை பகுதியில் பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இராக்கில் குண்டு வெடித்து 8 பேர் பலி..
இராக் தலைநகர் பாக்தாத் அருகே சந்தையில் நேற்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 8 பேர் பலியாயினர். 21 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவர்.












Click it and Unblock the Notifications