காஷ்மீரில் டிவி பார்க்க லஷ்கர்-ஏ-தொய்பா தடை!
டெல்லி: காஷ்மீரில் உள்ள சில கிராமங்களில் டிவி பார்க்க லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தடை விதித்திருப்பதாகவும், மீறுபவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிகிறது.
காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பனிஹல் நகர் இருக்கிறது. இந்த நகர் மற்றும் அருகில் இருக்கும் கிராமப்புற மக்கள் டிவி பார்க்க கூடாது. அது இஸ்லாமுக்கு எதிரானது என கூறி லஷ்கர் தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர். இதை மீறி டிவி பார்ப்பவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
கால்களிலும், முதுகிலும் அடி வாங்கிய தழும்புகளுடன் இருக்கும் குலாம் நபி என்பவர் கூறுகையில்,
வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் உள்ளே புகுந்து, என்ன சராமரியாக அடித்து உதைத்தனர். டிவியை தூக்கி போட்டு உடைத்துவிட்டனர் என்றார்.
அருகிலிருக்கும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு ஆறு தீவிரவாதிகள் வந்தனர். அவர்களில் மூன்று பேர் டிவியை உடைத்தனர். மற்றவர்கள் என்ன தாக்கினர். அவர்கள் டிவி பார்ர்ப்பது ஒரு பாவச்செயல் என கூறியுள்ளனர். ஆனால், உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் டிவி பார்ப்பதை நிறுத்த கூடாது என கேட்டு கொள்கிறேன்.
அவர்கள் டிவியை மூட்டாள்களின் பெட்டி என்றனர். இதனால் அனைத்து பிரச்சனைகளுகம் உருவாகிறது. இது மக்களின் மனதில் தவறான எண்ணங்கலை வளர்க்கிறது என்றார்.
இது குறித்து ஜம்மு பகுதி ஐஜி சோக் குப்தா கூறுகையில், டிவி அதிக சக்தி வாய்ந்தது. இது தீவிரவாதிகளின் முகமூடியை கிழித்துவிடுவதால் அவர்கள் இது போன்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் வெறுப்பில் இருக்கின்றனர் என்றார்.