பெண்ணை கற்பழித்த போலீஸ்காரருக்கு கத்தி குத்து
நெல்லை: நெல்லை அருகே வாசுதேவநல்லூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்த போலீஸ் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியை பிள்ளையார் என்பவரின் மகன் சுரேஷ்குமார். ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரும் இதே ஊரை சேர்ந்த துரை என்பவரின் மகள் வனிதாவும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்வதகா கூறி சுரேஷ்குமார், வானிதாவை கற்பழித்துள்ளார். இதில் வனிதா கர்ப்பமடைந்தார். இந்த விஷயத்தை வனிதா, சுரேஷ்குமாரிடம் கூறிய போது அவர் கருவை கலைத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என கூறிவிட்டார்.
சுரேஷ்குமார் வீட்டினர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து ஆத்திரமடைந்த வனிதாவின் தந்தை துரை மற்றும் அண்ணன் சதன் இருவரும் சேர்ந்து ஆத்துவழி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுரேஷ்குமாரை கத்தியால் குத்தினர்.
இதில் சுரேஷ்குமார் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வாசுதேவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்தனர்.
வனிதாவின் அண்ணன் சதன், இச்சம்வத்துக்கு துணை போன பஞ்சாயத் தலைவரின் கணவர் அண்ணாமலை மற்றும் ஸ்ரீதரை உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே வனிதா, வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ்குமார் கற்பழித்ததாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரின் தந்தை பிள்ளையார், தாய் லட்சுமி மற்றும் அக்காவையும் கைது செய்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications