விலை உயர்வு ஏன்?-பிரதமரிடம் சோனியா கேள்வி
டெல்லி: நாட்டில் பணவீக்கமே இல்லாத நிலையில், விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வது ஏன் என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
மேலும் மக்களை அச்சுறுத்திவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் அதன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு பற்றி விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மொத்த விலை குறியீட்டு எண்ணும், பணவீக்கமும் குறைந்துவருவதாக அரசு அறிவித்து வரும் நிலையில், சில்லறை விலை மட்டும் ஏன் உயர்ந்து வருகிறது? என்று வியப்பு தெரிவித்தார்.
வறட்சி நிலவரம் மிகவும் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், அதே நேரத்தில் நிலைமையை சமாளிப்பதற்காக அரசு முழு வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பணவீக்கம்- விலைவாசி முரண்பாடுகள் குறித்து விரைவில் விவாதிக்கப்படும் என்றார் பிரதமர்.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக பருப்பு, எண்ணை வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர இயக்கம் தொடங்கப்படும் என்றும் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உள்துறை மந்திரி ப.சிதம்பரம், அத்தியாவசிய பொருட்களின் செயற்கை பற்றாக்குறைக்கு காரணமான பதுக்கல், கள்ளச்சந்தையை ஒழிப்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications