For Daily Alerts
Just In
ஜெ.வை மக்கள் நிராகரித்து விட்டனர்-கருணாநிதி
சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விடுத்த அழைப்பை மக்கள் நிராகரித்து விட்டதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின் நிருபர்ளை சந்தித்த அவர் அளித்த பேட்டி:
போட்டி இல்லாமல் தேர்தல் 5 இடங்களிலும் நடைபெற்றது என்று சொல்லப்பட்டாலும் கூட்டணியிலே உள்ள கட்சிகளின் தொண்டர்களும், முன்னணியினரும் கடுமையாக உழைத்தார்கள்.
அந்த அளவிற்குப் பிரசாரம் நடைபெற்றிருக்கிறது. ஆகவே உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி இது என்றே சொல்லலாம்.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சொன்னதை மக்கள் ஏற்கவில்லை.
வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல், வாக்காளப் பெருமக்கள் வாக்களித்திருப்பது எனக்கு மன நிறைவு தருகிறது என்றார்.
Comments
திமுக அதிமுக ஜெயலலிதா karunanidhi கருணாநிதி committee நிராகரிப்பு victory tamilnadu assembly by election
Story first published: Friday, August 21, 2009, 15:25 [IST]