தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு
சென்னை: தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் துவங்கும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துபாய், உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் நேற்று தொடங்கியது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவாசல்களில் இஷா தொழுகைக்குப் பின்னர் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது.
ஆனால், தமிழகம் உள்பட இந்தியாவின் பெருமபாலன பகுதிகளில் ரமலான் பிறை நேற்று தெரியவில்லை. இருப்பினும் கேரளா உள்பட பல பகுதிகளில் இன்று முதலே இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந் நிலையில் தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜி முகம்மத் சலாஹூதீன் அயூப் அறிவித்துளளார்.
மெகா டிவியில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி:
ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இனறு முதல் "மனித குலத்திற்கு இஸ்லாம் வழங்கிய நன்மைகள்" என்ற தலைப்பில் ரமலான் மாதம் முழுவதும் தொடர் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மெகா டிவியில் ஒளிப்பரப்பாகிறது. இதில் பிரபல இஸ்லாமிய அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றுகிறார்.