27 மாணவர்களுக்கு லேப்-டாப்கள்: ஸ்டாலின் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கு லேப்-டாப்களை வழங்கினார் துணை முதல்வர் ஸ்டாலின்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 27 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8.7 லட்சம் மதிப்பிலான இந்த லேப்-டாப்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த 59 பேருக்கு பணி நிரந்தர ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் சென்னை மாநகராட்சி கல்வித்துறை சார்பில் மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ. 1 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ள சாய்வு இருக்கைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு ரூ. 16 லட்சம் செலவில் விளையாட்டு சாதனங்களும் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications