சென்செக்ஸில் இன்று 390 புள்ளிகள் உயர்வு
மும்பை: கடந்த வாரம் முழுவதும் ஊசலாட்ட வர்த்தகத்தால் மண்டை காய்ந்து போன முதலீட்டாளர்களுக்கு, இந்த வாரத்தின் முதல்நாளே அமோகமாக இருந்தது.
இன்று வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்தே ஏறுமுகத்திலிருந்து சென்செக்ஸ், இறுதியில் 390 புள்ளிகள் உயர்வு கண்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 113 புள்ளிகள் உயர்ந்தது .
அனைத்துத் துறை பங்குகளுமே இன்று லாபத்தில் கைமாறின. ரியல் எஸ்டேட் துறைப் பங்குகளுக்கான குறியீட்டெண்ணில் அதிகபட்சமாக இன்று 5 சதவிகிதம் உயர்ந்தது.
நுகர்பொருள், உலோகங்கள், ஆட்டோ, ஐடி, தொழில்நுட்பத் துறை பங்குகள் அனைத்தும் நல்ல விலையில் கைமாறின.
டாடா மோட்டார்ஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ஐடிசி, எல் அண்ட் டி, ஹிண்டால்கோ, ஸ்டெரிலைட், டிசிஎஸ், எச்டிஎப்சி, மாருதி, டாடா ஸ்டீல்... என அனாத்து பங்குகளுமே நல்ல லாபத்தில் கைமாறின.
ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்துமே இன்று நல்ல முன்னேற்றம் கண்டன.