சென்னை வாலிபர் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வயிற்று வலியால் அவதிப்பட்ட சென்னை வாலிபர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை, வாயலூர் அழகேசன் நகரில் வசித்து வந்தவர் எத்திராஜ். 35 வயதான இவர் அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்ப்டடு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு வயிற்று வலி அதிகரித்துள்ளது. இதனால் மிகவும் அவதிப்பட்ட அவர் வீட்டில் தனியறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுக்க தீ பரவ அலறி துடித்துள்ளார். அலறல் சத்தத்தை கேட்ட அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தீயை அணைத்தனர். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications