சம்பளத்தை சரியான தேதியில் தர ஏர் இந்தியா ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாதத்துக்கான சம்பளம் இம்மாத இறுதியிலேயே வழங்கப்பட்டு விடும் என்றும், இனி காலதாமதம் ஏற்படாது என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
முன்னதாக ஏர் இந்தியா ஊழியர்களின் அனைத்து சங்கங்களும் இணைந்து இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பட்டினிப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்தன. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
உடனடியாக சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பல்வேறு அலவுன்ஸ்களை ரத்து செய்தது தொடர்பாக முதல் சுற்றுப் பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
இதில் முதல்கட்டமாக, ஊழியர்களுக்கான சம்பளத்தை சரியான தேதியில் தருவதற்கு நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications