சண்டிகர் பளு தூக்கும் போட்டி-தங்கம் வென்ற கோவை வீரர்
Subscribe to Oneindia Tamil
கோவை: சண்டிகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் கோவை வீரர் நாகராஜ் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆசிய மற்றும் அகில இந்திய பளு தூக்கும் சங்கம் சார்பில், ஆசிய அளவில் சண்டிகரில் ஆண்கள், பெண்களுக்கான போட்டி சண்டிகரில் நடந்தது. இதில் 12 நாடுகளை சேர்ந்த 329 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட நாகராஜ், 56 கிலோ எடை பிரிவில், 135 கிலோ எடையை தூக்கி, அபார வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
அவருக்கு இந்திய அணி வீரர்களும், பயிற்சியாளரும் வாழ்த்து கூறினர்.












Click it and Unblock the Notifications