மோடிக்கு 'எப்டிஐ ஆசியன் பெர்சனாலிட்டி' விருது

உலகம் முழுவதும் அரசியல் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் தலைவர்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருதினை எப்டிஐ இதழ் வழங்கி வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தலைவர்கள், தங்களது பகுதியில் வர்த்தக சூழ்நிலையை சிறப்பாக பராமரிப்போர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்படுகின்றனர் என்று எப்டிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
குஜராத் மாநிலம் கடந்த ஆண்டு 2.8 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்ததாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்த நேரடி முதலீடுகளில் 10.3 சதவீதம் என்றும் எப்டிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் பெற்ற நேரடி முதலீடுகளை விட இது 57 சதவீதம் அதிகம். குஜராத் மாநிலம் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதி வேக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் என்றும் எப்டிஐ தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications