நீதிபதியை மாற்றக் கோரி திருப்பூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதியை மாற்றக் கோரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கோவை மகளிர் கோர்ட் நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதியை மாற்றக் கோரி வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக இந்த நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நீதிபதியை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி கோவை மற்றும் திருப்பூரில் இன்று வக்கீல்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications