For Daily Alerts
Just In
நீதிபதியை மாற்றக் கோரி திருப்பூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
கோவை: கோவை மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதியை மாற்றக் கோரி மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கோவை மகளிர் கோர்ட் நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதியை மாற்றக் கோரி வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக இந்த நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நீதிபதியை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி கோவை மற்றும் திருப்பூரில் இன்று வக்கீல்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
Comments
Story first published: Wednesday, August 26, 2009, 14:11 [IST]